உடலை வெளிப்படுத்தி நடிக்க ராணி முகர்ஜி, கரீனா கபூர் மறுப்பு!
பொலிவூட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் இந்தியாவின் சிற்றரசிகளில் ஒருவராக விளங்கிய பேகம் சம்ருவின் வேடத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்
இப்படத்தின் கதையின்படி மிகக் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும் என்பதே இதற்குக் காரணம்.
நடன மங்கையாக வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட்ட சர்தானா பிராந்தியத்தின் ஆட்சியாளராக விளங்கியவர் பேகம் சம்ரு.
1836 இல் இறந்த அவர், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் அதிகாரப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தவர்.
அவர் தொடர்பான திரைப்படமொன்றை இயக்குநர் திக்மன்சு தூலியா இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ராணி முகர்ஜி, கரீனா கபூர் ஆகியோரை அணுகியபோது அவர்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனராம்.
“இந்தப் படத்தின் கதாநாயகி உடலை வெளிப்படுத்தி நடிக்க வேண்டியிருக்கும். இப்படத்தின் திரைக்கதையை ராணி முகர்ஜி விரும்பினார். ஆனால் உடலை வெளிப்படுத்த நடிக்க முடியாது எனக்கூறி அவர் மறுத்து விட்டார்.
இதே காரணத்துக்காக கரீனா கபூரும் மறுப்பு தெரிவித்தார்” என இயக்குநர் திக்மன்சு தூலியா கூறினார்.
இந்திய நடிகைகள், குறிப்பாக, முன்னிலையிலுள்ள நடிகைகள் இப்பாத்திரத்தில் நடிக்க விரும்பமாட்டார்கள் என்பதால் இப்போது நான் வெளிநாட்டு நடிகையொருவரை இப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு முயற்சிக்கிறேன்” என்கிறார் திக்மன்சு.
Average Rating