மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி; நால்வர் மீட்பு!
Read Time:1 Minute, 21 Second
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வடிகான் ஒன்றை வெட்டுவதில் இந்தப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த அனர்தத்தத்துக்கு முகங்கொடுத்தனர். தெஹியத்தகண்டி என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மண்ணுக்குள் சிக்குண்ட எனைய இருவரையும் உனடியாக மீட்கக் கூடியதாகவிருந்தும் ஏனைய இருவரையும் மீட்டெடுப்பதில் அதிக பிரயத்தனம் தேவைப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கொழும்பு நீதவான் கபில துஷ்யந்த எபிட்டவல இந்த சடலம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
Average Rating