புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!
புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!: பிள்ளைகளை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு
புத்தளம் தில்லையடி ஜூம்ஆ பள்ளி வாசலில் சனிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாகக் கூறப்படும் மூன்று சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் மூவரும் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இம் மூன்று சிறுவர்களும் சனிக்கிழமை இரவு தில்லையடி ஜூம்ஆப்பள்ளி வாயலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டிலை உடைத்து பணம் திருடிய வேளை ஊர்மக்களினால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் அவர்களை விசாரித்ததுடன், அதுபற்றி பெற்றோர்களுக்கு அறிவித்தனர்.
குறித்த சிறுவர்களின் பெற்றோர்களும் தமது பிள்ளைகளை பொறுப்பேற்க மறுத்ததினால் அந்த மூன்று சிறுவர்களும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று சிறுவர்களிடமும் 2500 ரூபா பணம் கையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating