சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!
Read Time:1 Minute, 18 Second
சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை உடைத்தார் என்ற சந்தேகத்தில் கைதானவர் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, சிற்றுண்டிச்சாலை ஒன்றை உடைத்தவர் என்ற சந்தேகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அச்சிறுவன் வழங்கிய வாக்கு மூலத்தில் தனது தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் தந்தை மற்றும் தங்கையுடன் வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இதேநேரம், அவ்வீட்டில் மற்றுமொரு சிறுமியும் வசித்ததாகத் தெரிய வந்துள்ளது. அச்சிறுமி 14 வயதானவள் என்றும் மேற்படி சந்தேக நபர் அச்சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்தததை அடுத்து பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
Average Rating