நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இனம் தெரியர்தவர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரையுமான நேரப் பகுதிக்குள் குறித்த ஆலயத்தி னுள் சென்ற இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிக் கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கல மாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து அச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடையைக் கழற்றி அதே இடத்தில் வைத்து விட்டு சொரூபத்தை திருடிச் சென்றுள்ளனர்.
ஆலயத்தில் பணி புரிகின்ற ஒருவர் ஆலையத்தினுள் சென்று பார்த்த போது மாதாவின் சொரூபம் அங்கு இல்லாதமை தெரிய வந்தது.உடனடியாக குறித்த ஆலையத்தின் நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
Average Rating