காதலன் உட்பட அறுவரால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!
காதலன் உட்பட ஆறு இளைஞர்கள் யுவதியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம்மொன்று கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மொரவக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருத்தியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் தனது காதலனுடன் மொரவக பிரதேசத்திலுள்ள எத்தாமலை பிரதேசத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து பெண்ணின் காதலன் அவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி விட்டு தொலைபேசி மூலம் மேலும் ஐந்து நண்பர்களை அழைத்துள்ளார்.
இவர்கள் 22, 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணின் கூக்குரல் சத்ததை கேட்ட கிராம மக்கள் மொரவக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் காதலனும் மேலும் இரு இளைஞர்களும் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை தேடி பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆறு பேரினால் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் மொரவக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Average Rating