லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!

Read Time:2 Minute, 14 Second

smile-hahaமெதுவாகச் சென்று கொண்டிருந்த லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளைக் கீழே தள்ளிய நபர்!: திருடியவற்றை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது-
வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லொறி மெதுவாகச் செல்வதனை அவதானித்த நபரொருவர் அதற்குள் ஏறி அங்கிருந்த 18 வெங்காய மூடை­களை கீழே தள்ளி அவற்­றினை விற்­பனை செய்ய முயற்­சித்த போது கைது செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று புத்­தளம் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலுத் தெரிய வரு­வ­தா­வது, கொழும்­பி­லி­ருந்து யாழ். நக­ருக்கு புத்­தளம் வழி­யாக பொருட்கள் ஏற்றிச் செல்­லப்­ப­டு­வது வழக்கம்.

அதன்­ பி­ர­காரம் கடந்த திங்­க­ளன்று, பொருட்கள் ஏற்­றப்­பட்ட லொறி ஒன்று இரவு நேரத்தில் புத்­தளம் நக­ரைத்­தாண்டி சுமார் மூன்று கிலோ­ மீட்டர் தூரத்தில் மலைப்­பாங்­கான பகு­தியில் மெது­வாக சென்­று­கொண்­டி­ருந்­தி­ருந்­தது, இதனை அவ­தா­னித்த நப­ரொ­ருவர் பின் வழியால் லொறிக்­குள்ள ஏறி அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த 18 மூடை வெங்­கா­யத்தை ஒவ்­வொன்­றாக வீதியில் எறிந்­துள்ளார்.

பின்னர் அவை­களை சேக­ரித்து நக­ரி­லுள்ள வர்­த­தக நிலை­யங்­களில் விற்­பனை செய்ய முயன்­ற­போது புத்­தளம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்பு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார். சந்­தேக நபரை விசா­ர­னைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!
Next post யாழ். ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருட்டு!!