மடக்கும்புர – டொப்லோவர் தோட்ட லயன் குடியிருப்பில் தீ: 20 வீடுகள் சேதம்!
Read Time:1 Minute, 17 Second
தலவாக்கலை – மடக்கும்புர – டொப்லோவர் தோட்ட 7ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்று (04) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் லயன் வீடுகளில் இருந்த பொருட்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீ ஏற்பட்ட போது தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர்.
எனினும் வீட்டில் இருந்த சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்போது சிறியளவான பொருட்களை மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியில் எடுக்க முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மடக்கும்புர – கலாபொவன பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating