மோட்டார் குண்டொன்று மீட்பு….!!
Read Time:1 Minute, 12 Second
திருகோணமலை, குச்சவெளி என்னும் இடத்தில் 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2 ஆம் வட்டாரத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தங்களுடைய வீட்டு வளைவில் மர்மமான பொருளொன்று கிடப்பதாக வீட்டு உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் இது தொடர்பில் இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இராணுவத்தினர் அந்த குண்டை மீட்டு பொறியிலாளர்கள் உதவியுடன் குண்டை செயலிழக்க செய்துள்ளனர்.
யுத்த காலத்தில் ஏவப்பட்ட குண்டே அந்த வீட்டு வளவிற்குள் விழுந்து வெடிக்காமல் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
Average Rating