ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் சீ.வி. விக்னேஸ்வரன்
Read Time:1 Minute, 22 Second
வட மாகாண முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று பகல் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற விசேட கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அலரிமாளிகையில் பதவியேற்பு நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வட மாகாண சபையின் அமைச்சரவை எதிர்வரும் 11 ஆம் திகதி புதிய முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா, சம்பந்தன் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
Average Rating