ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
Read Time:1 Minute, 14 Second
மாத்தறை பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குமாறு கோரி அக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து குறித்த பகுதியில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ்விரு குழுவினருக்கும் இடையில் மாத்தறை நகரப்பகுதியில் மோதல்நிலை உருவானது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் எழுவர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Average Rating