இராணுவ பிரசன்னம் இல்லை – மேலோர் சபை
Read Time:51 Second
இலங்கையில் சமாதானமான சூழ்நிலை காணப்படுவதாக, பிரித்தானிய மேலோர் சபை உறுப்பினர் ரோஹன் லோர்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான அவர், ஏழு நாட்களுக்கான தகவல் அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக இலங்கை வந்துள்ளார்.
தாம் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போதும், கூறப்பட்டதை போன்று இராணுவ பிரசன்னத்தை காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating