விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் பரிசளித்த விநாயகர் சிலை!
Read Time:1 Minute, 18 Second
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விநாயகர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
இன்று காலை அலரி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மரத்தினாலான அழகிய விநாயகர் சிலை ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பரிசாக வழங்கினார்.
அதேவேளை, பதவியேற்பு நிகழ்வு முடிந்த பின்னர், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் பிரமுகர்களுக்கு சிறிலங்கா அதிபர் தேனீர் விருந்தளித்தார்.
இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்து செயற்படத் தயாராக இருந்தால், வடக்கின் அபிவிருத்திப் பணிகளை இணைந்து மேற்கொள்ளத் தாம் தயார், என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
Average Rating