சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!
Read Time:1 Minute, 23 Second
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் முன்னிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மும்மொழித் திட்டத்துக்கான உதவி மற்றும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகள் நேற்று கையெழுத்திடப்பட்டன.
இதில், சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான எட்டுப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் கனேகல மற்றும் இந்திய என்.டி.பி.சி. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி அருப்ரோய் ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
Average Rating