அமைச்சர் மேர்வினின் இணைப்பாளர் உட்பட கொழும்பில் இருவர் கடத்தல்!
Read Time:1 Minute, 19 Second
மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் களினி பிரதேச இணைப்பாளர்களில் ஒரு வரான ஜே.டி. திலக்கசிறி என்பவரும் அவருடன் வாகனத்தில் பய ணம் செய்த நபரொருவரும் இன்று அதிகாலை 5.40 மணியளவில் டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் போக்குவரத்து அமைச்சுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த வாகனம் காணப்பட்டதாகவும் இவ் வாகனம் தற்போது மருதானை பொலிஸ் நிலைய த்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை 5.40 மணிய ளவில் இந்த வாக னம் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக மருதானை பொலிஸாரு க்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating