மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் நகைகளை அபகரிக்கும் நபர் கைது!
Read Time:1 Minute, 15 Second
மோட்டார் சைக்கிள்களில் சென்று பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறிக்கும் கோஷ்டியொன்றைச் சேர்ந்த நபரொருவரை ஹிங்கிராங்கொட பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நபரொருவருடன் சேர்ந்து ஹிங்குராங்கொட நகரிலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு கடமையாற்றச் சென்று கொண்டிருந்த இரு பெண்களை அச்சுறுத்தி ஒரு பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் இக்கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இந்த சந்தேக நபரைக் கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பல கொள்ளைகள் தொடர்பாகக் பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating