புதையல் தோண்டிய நால்வர் விளக்கமறியலில்!
Read Time:57 Second
பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நால்வரையும் பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating