அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்தவர் கைது!!
Read Time:43 Second
அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகாஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating