200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு: அறிவித்தார் சச்சின்!!

Read Time:2 Minute, 8 Second

2474sachinஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட போட்டிகளில் ஏற்கெனவே ஒய்வை அறிவித்துள் சச்சினின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து பலவாறான கருத்துகள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே அவர் தனது ஓய்வு குறித்த முடிவினை வெளியிடுள்ளார்.

இது தொடர்பின் இன்று அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

சச்சின் அனுப்பி வைத்துள்ள அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24 வருடங்களாக ஒவ்வொரு நாளும் இந்திய அணிக்காக விளையாடும் கனவுடனேயே வாழ்கிறேன்.

கிரிக்கெட் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைக்கவே கடினமாக உள்ளது. எனது சொந்த மண்ணில் 200ஆவது போட்டியை சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளேன்.

எனக்கு அனைத்து வகையிலும் உதவிவரும் இநதிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் என்னை புரிந்துகொண்ட எனது குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரவித்துள்ளார்.

இதுவரையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 51 சதங்களும் 67 அரைச் சதங்களும் உள்ளடங்கலாக 15,837 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை!
Next post ஐந்து மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபருக்கு விளக்கமறியல்..