பாகிஸ்தான் தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொலை!

Read Time:1 Minute, 43 Second

army-lankaபாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து வந்த பாகிஸ்தான் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்களுக்கும் இடையே ஆப்கானிஸ்தானின் குனார் மாகாண காசியாபாத்தில் சண்டை மூண்டது.

இதில் பலத்த ஆயுதங்களை கொண்டு ஆப்கான் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா பஸ்லுல்லாவும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பலர் படுகாயமடைந்தனர். சண்டை நடந்ததை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் தலிபான்கள், கமாண்டர்கள் கொல்லப்பட்டதை மறுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள கமாண்டர் பஸ்லுல்லா கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டப்பட்டார்.

இவர்கள் தான் மனித உரிமை போராளி சிறுமி மலாலா யூசுப்சாயை சுட்டுக்கொல்ல முயற்சித்ததை ஒப்புக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் விபத்தில் இருவர் படுகாயம்!
Next post படகு விபத்தில் 300 பேர் இறப்பு!!