இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலின்போது அதிகளவிலான இராணுவத்தினர் சகல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் தற்பொழுதும் இடம்பெற்று வருகின்றது. அதிகளவிலான இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கையினால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வீதியோரங்களில் ஆயதங்களுடன் மறைந்து நிற்கும் இராணுவத்தினர் வீதியில் செல்வோரிடம் சோதனையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதான வீதிகளில் பொலிஸாருடன் இணைந்தும் சில இடங்களில் இராணுவத்தினர் தனித்தும் வாகனங்களை சோதனையிடுவதுடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்போரையும் மறித்து விசாரணை செய்ததன் பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர்.
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகளால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
Average Rating