ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம்: சுரேஷ்!!
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியானது எமது கட்சிக்காக வழங்கப்பட்ட அமைச்சாக கருதக்கூடாது என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
‘எமது கட்சியின் கோட்பாடுகளை மதிக்காமல் செயற்பட்டது மட்டுமல்லாமல், எமது கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோரணையில் அறிக்கையினையும் ஐங்கரநேசன் விட்டிருந்தார். இதனடிப்படையில் ஐங்கரநேசனுக்கும் எமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆகையினால், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியானது ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியாக கருதக்கூடாது என மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்..’ என சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating