250 குடியேற்றவாசிகளுடன் படகு கவிழ்ந்தது!
Read Time:1 Minute, 12 Second
ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு சுமார் 250 குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று நேற்று வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்துள்ளது.
இத்தாலியின் சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் இப்படகு கவிழ்ந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் எரி;த்திரிய மற்றும்சோமாலிய குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று தெற்கு இத்தாலிய தீவான லம்பென்டுசாவுக்கு அருகில் கவிழ்ந்ததால் 319 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று கவிழ்ந்த படகிலிருந்து கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்றுவதற்காக இத்தாலிய மீட்புப்ப டை ஹொலிகொப்படர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இத்தாலிய கடற்படை பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
Average Rating