முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்…
அழகுராணிப் போட்டியில் முடிசூடிய தமிழ்த் தலைவர்கள்… என்ன தான் நடக்கிறது ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு முடிசூட்டிய நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை (11.10) நடைபெற்றது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போதே இந்த முடிசூட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, அவ்விருவருக்கும் முடிசூட்டிய ஆதரவாளர்கள், அதன் பின்னர் அவ்விருவரிடமும் வெள்ளி வேல்களையும் கையளித்துள்ளார்கள் என்றால் பாருங்களேன் !
45,000 விதவைகள் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கவீனர்கள், 44,000 மாவீரர்கள், 40,000 கொல்லப்பட்ட பொதுமக்கள்! இவர்கள் அனைவரையும் ஒரு முறை நினைத்துப் பார்த்தால், இவர்கள் போல மேடையில் அமர்ந்திருந்து போஸ் கொடுக்க முடியுமா? தெரியவில்லை!
மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அல்லல் படும் எம்மின மக்களுக்கு உடனே உதவிகளைச் செய்யலாமே.. இதனை விடுத்து ஆடம்பர நிகழ்வுகளை நடத்தி, வெள்ளி வேலை பரிசாகப் பெற்று, அழகுராணிப் போட்டியில் போடும் முடியை (கிரீடத்தை) போட்டால்? எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா???
Average Rating