பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் கைது!
Read Time:1 Minute, 1 Second
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றி வளைத்த போது அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தவறியமையின் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இங்கு கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டியை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தாது இருப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதியிடமிருந்து பணம் பெற்ற முறைப்பாட்டின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating