ரயிலின் முன் பாய்ந்து தாயும் மகளும் தற்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் தாயொருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றுவெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating