காட்டு யானை தாக்கி மாணவன் மரணம்!!

Read Time:1 Minute, 31 Second

elephant-001மட்டக்களப்பு உறுகாமம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் உறுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயதான மாணவனே காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸாரின் அறிவித்தலின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி வீ.வினோபா இந்திரனின் உத்தரவுக்கமைய ஸ்தலத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை மேற்கொண்டார்.

செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மட்டக்களப்பு வனத்திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை சடலத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிசைகளுக்கு தீவைத்த நபர் கைது
Next post வைத்தியர் மயங்கி விழுந்து மரணம்!