மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!
அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகாமம், றூகடவௌ பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் இருவரும் பிரதேசத்திலுள்ள சிறிய கற்குகை ஒன்றை குடைந்து புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து அலவாங்கு, மண்வெட்டி, சவல் உள்ளிட்ட 15 உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் இன்று (15) நொச்சியாகாமம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை பொலன்நறுவை புலஸ்திகம பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இந்நபர் பொலன்நறுவை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்நறுவையைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நபர் இன்று (பொலன்நறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன் பல்லம, புருதகெல் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லம பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நபர்கள் இன்று (15) சிலாபம் நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating