சார்ள்ஸின் இலங்கை விஜயம் உறுதி

Read Time:1 Minute, 29 Second

uk.charles-01இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பில் பிரித்தானிய இளவரசர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை பிரித்தானிய இளவரசர் இலங்கை வரவுள்ளதோடு அவர் நவம்பர் 16ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இளவரசரின் இளவரசியாரும் இலங்கை வரவுள்ளார்.

இவர்கள் பொதுநலவாய மாநாட்டு ஆரம்ப நிகழ்விலும் இரவு விருந்திலும் பங்கேற்பதோடு இன்னும் சில தரப்பினருடன் சந்திப்பு நடத்தவுள்ளனர்.

மேலும் சுகாதார வைத்தியசாலை ஒன்றுக்கும் தேயிலை தோட்டம் ஒன்றுக்கும் பிரித்தானிய இளவரசரும் அவரது இளவரசியும் விஜயம் செய்யவுள்ளனர்.

இளவரசர் இதற்கு முன்னர் 1998ம் ஆண்டிலும் 2005ம் ஆண்டிலும் இலங்கை வந்தார். அத்துடன் அவரது இளவரசியார் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாக்டரை கொலை செய்த கைதிக்கு மரண தண்டணை
Next post 70 வயதுப் பாட்டியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த 19 வயது பேரன் கைது