70 வயதுப் பாட்டியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த 19 வயது பேரன் கைது
தனது 70 வயது பாட்டியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தமை தொடர்பாக 19 வயது இளைஞனொருவரை கல்லேவ பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இம்மூதாட்டியுடன் வசித்து வந்த அவரது மகன் தனது மனைவியுடன் வெளியில் சென்றிருந்த வேளையில் வீட்டினுள் புகுந்து தான் பாட்டியின் மீது குற்றம் புரிந்ததாகவும் இதன்போது இரவு நேரமாக இரந்த போதிலும் பாட்டி தன்னை அடையாளம் கண்டுகொண்டதையடுத்த அவருடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்ய நேர்ததாகவும் சொல்லப்பட்ட மூதாட்டியின் பேரன் எனக் கூறப்படும் சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் ö தாடர்பாக ணுஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட கெக்கிராவ நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கோசல இலங்கசிங்ஹ பிரேத பரிசோதனை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
Average Rating