தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி!

Read Time:1 Minute, 37 Second

news-005மகாவலி ஆற்றில் சுமார் 70 அடி உயர பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கம்பளை ஏற்காலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சம்பவ தினம் பொதுமக்கள் முன்னிலையிலேயே குறித்த பெண் கம்பளை மகாவலி ஆற்று பாலத்தில் மேலேறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் துரிதமாக செயற்பட்ட பொதுமக்கள் கம்பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் பொலிஸாருடன் இணைந்து அப்பெண்ணை மீட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெண் கம்பளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் தியாகு
Next post சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்!