காணாமற் போன பெண், இரண்டு வருடங்களின் பின்னர் சடலமாக மீட்பு!
காணாமற் போயிருந்த பெண் ஒருவர் கொட்டாவையிலுள்ள வீடொன்றின் கழிவறைக்குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 68 வயதான பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதவான் முன்னிலையில் சடலம் இன்று பிற்பகல் கொட்டாவ கட்டுகுருந்த பகுதியில் உள்ள வீட்டின் கழிவறைக் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் காணமல்போவதற்கு முன்னர் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் நிர்மாணப் பணிகளுக்காக வந்திருந்த மேசனுடன் தனது மகள் பேணிய உறவுக்கு எதிர்ப்பை வெளியிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகளும் மேசனும் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating