பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!
Read Time:1 Minute, 5 Second
பதுளையில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், குறித்த இரு சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இதில் ஒரு பெண்ணிடம் இருந்து 38 கிராம் ஹெரோயினும் மற்றைய பெண்ணிடம் இருந்து 4 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பதுளை, வெலிமட ஆகிய பகுதிகளுக்கு ஹெரோயின் விநியோகிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating