பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!

Read Time:1 Minute, 5 Second

arrest-womanபதுளையில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், குறித்த இரு சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்.

இதில் ஒரு பெண்ணிடம் இருந்து 38 கிராம் ஹெரோயினும் மற்றைய பெண்ணிடம் இருந்து 4 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பதுளை, வெலிமட ஆகிய பகுதிகளுக்கு ஹெரோயின் விநியோகிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானம் நதியில் விழுந்து விபத்து, 44பேர் பலி
Next post இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை