மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!

Read Time:1 Minute, 54 Second

51d2552a-2255-4fc9-a79e-83ff82b0cfce_S_secvpfஅமெரிக்காவில் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஜெர்மன் ஸ்டிரீட் என்ற இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துவந்த போது பிரீத்தா பால் கப்பா(49) என்ற பெண் குண்டடி பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை ஆம்புலன்சில் போலீசார் ஏற்றி அனுப்பினர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்த போது பலியான பெண்ணின் உடல் அருகே யாரோ ஒரு பெண்மணியை பார்த்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, துப்பு துலக்கிய போலீசார் கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரும் அவரது இந்நாள் மனைவியும் கடந்த 28ம் தேதி 2 துப்பாக்கிகளை வாங்கியதை கண்டுபிடித்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த குண்டுகள் மேற்கண்ட துப்பாக்கிகளின் குண்டுகளுடன் ஒத்திருந்ததால் கொலையான பெண்ணின் முன்னாள் கணவர் பால்டியோ தனேஜா(62) மற்றும் அவரது இரண்டாவது மனைவி ரமிந்தர் கவுர்(63) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!
Next post அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி!!