அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!
Read Time:1 Minute, 1 Second
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது.
லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக நடத்;தப்படும் கூட்டம் இன்றும் நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு பொதுநலவாய நாடுகள் இணக்க வேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.
Average Rating