இலங்கையின் எதிர்காலம் குறித்து பக்கர் நம்பிக்கை!!
அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கரால் கொழும்பு நகரில் ஸ்தாபிக்கவுள்ள பெரியதொரு சூதாட்ட நிறுவனம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரியதொரு சூதாட்ட நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிப்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் விவாதித்து அங்கீகரிக்கவுள்ள நிலையிலும் மதத்தலைவர்கள் அந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையிலுமே அவர் இலங்கை தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செயற்றிட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் அங்கிகரிக்க வேண்டியுள்ளது.
டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமையவுள்ள இந்த திட்டத்தில் கேட்போர் கூடம் உட்பட பல வசதிகளுடன் கூடிய 400 அறைகள் கொண்ட ஹேட்டல் சூதாட்ட வசதிகள் ஆடம்பர உணவகங்கள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் அமையவுள்ளன.
அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் இந்த சூதாட்ட நிறுவனத்திற்கு 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை முதலிடவுள்ளதாகவும் இதனூடாக நாட்டின் சுற்றுலாத்துறை வாண்மையடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளிட்டுள்ளார்.
இந்த திட்டத்தினூடாக 2500 தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன் சுற்றுலாத்துறையினரின் மட்டம் 2016 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating