ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப் பிரமாணம்!

Read Time:1 Minute, 42 Second

tna.inthirrasaசத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்;சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி அங்கத்தவர்கள் மூவர் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் போது, தான் முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வருகை தந்திருந்தார் இதன்போதே அவர் முன்னிலையில் இந்திராசா சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் திறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்திருந்தபோதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் இடத்தில் அவர் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் பெண்களின் ஆட்டம்! (வீடியோ)…
Next post 65 வயதான பெண்ணைக் கொன்ற மகளும், கள்ளக்காதலனும் கைது!!