(VIDEO) கள்ளக்காதல் காதல் ஜோடிக்கு நிர்வாணமாக்கி சித்திரவதை!!
இது காதல் ஜோடியல்ல.., கள்ளக்காதல் ‘ஜோடி’ யாகும். அதுவும் திருமணமான 35வயதுடைய 5 பிள்ளைகளை பெற்று பெண்ணுக்கும் கல்யாண முடிக்காத வாலிபருக்குமிடையே எற்பட்ட கள்ளக் காதலாகும். அதுவும் தான் பெற்ற 5 பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக் காதலி தனது ஆசைநாயகனுடன் தனது கிராமத்தை விட்டே ஓடியுள்ளார்.
இப்படியான கேடுகெட்ட கள்ளக் காதலர்களுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம்..?
கள்ளக்காதல் ஜோடியை, கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து பல்வேறு சித்திரவதைகளை கிராம மக்கள் செய்துள்ளனர். காதல் ஜோடியின் உடைகளை கிழித்து அவர்கள் உடலில் கறுப்பு பெயிண்ட் அடித்து ஊர்மக்கள் திரண்டு அவர்கள் அடித்து உதைத்த வண்ணம் 3 கிராமங்களில் வளைய வந்துள்ளனர்.
அத்துடன் அவர்களது உடலின் மர்மஸ்தான பகுதியில் மலம் உள்ளிட்ட அசிங்கங்களை கட்டித் தொங்க விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் கோகாரியா, பல்வாரி, படிபுரா கிராமம் முழுதும் இவர்களை தர்ம அடி கொடுத்து கூட்டிவந்துள்ளனர்.
மேலும் காதல் கணவன் கையில் ஒரு டிரம் ஒன்றைக் கொடுத்து அடித்து வரவும் செய்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் இவர்களை இவ்வாறு கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மிகவும் உற்சாகமாக இதில் பங்கேற்றமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவமானமும் சித்ரவதையும் முடிந்த பிறகு காதல் கணவன் பொலிசில் புகார் செய்ததாக தெரிகிறது. ஆனால் கிராம மக்கள் பொலிசையே மிரட்டியுள்ளனர். புகாரை எடுக்கவேண்டாம் என்று.
பிறகு பொலிசிலா புகார் கொடுக்கிறாய் என்று இரவு மீண்டும் அடி உதை கொடுக்கப்பட்டது காதலர்களுக்கு…
Average Rating