புலிகளின் தலைவி கைது
Read Time:1 Minute, 22 Second
புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவதாக 14 வருடங்களாக செயற்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் மன்னார் விடத்தல் தீவு பகுதியில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வசீந்திரன் மரியாசாந்தா என்ற குறித்த 31 வயது பெண், தமது ஒன்றரை வயது குழந்தையுடன் நேற்று விடத்தல் தீவ பகுதியில் கைதாகியுளளார்.
அவர் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வவுனியா, யாழப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்றபகுதிகளில் உள்ள தங்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருந்துள்ளார்.
இந்தகாலப்பகுதியில் அவர் தங்கி இருந்து வீடுகளில் இருந்து பெருமதிமிக்க தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றதாக கிடைக்கப் பெற்றபல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் போது, அவர் கொள்ளையிட்ட நகைகளை அரச வங்கிகளில் அடகு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
Average Rating