சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு
Read Time:52 Second
அண்மையில் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவரை சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர்அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
இந்த விடயம் குறித்த வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் செயலகத்தினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating