காதல் தொடர்பை கைவிட கோரியதால் மாணவன் தற்கொலை!
Read Time:1 Minute, 21 Second
காதல் தொடர்பு காரணமாக பெற்றோர்களது அறிவுறுத்தல்களினால் மன உளைச்லுக்குள்ளான 14 வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டம் ஆனைமடு – திவுல்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் அப் பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயின்று வருகிறார். அப் பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவருடன் இந்த மாணவனுக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து கொண்ட பெற்றோர், காதலை கைவிடுமாறு குறிப்பிட்டு அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னராக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் தூக்கிட்ட நிலையில் பெற்றோர்களால் வைத்தியசாலைக்கு மாணவன் எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
Average Rating