பழைய இரும்புக்கடையில் ஆட்லறி ரவை வெடிப்பு; புத்தளம் மாதம்பையில் சம்பவம்!

Read Time:1 Minute, 34 Second

bomp.blasts2மாதம்பை, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டிலறி வகை ஆயுத ரவையின் பகுதியே இவ்வாறு வெடித்துச் சிதறியிருப்பதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் மாதம்பை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்டதாகக் கணிக்கப்படும் மேலும் ஒரு தொகை ஆட்டிலெறிக்கான ரவைகளும் அவ்விடத்திலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதிக்கு அருகிலிருந்த கட்டிடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு!
Next post மாமியாரை தாக்கி நிர்வாணப்படுத்தி வீதியில் துரத்திய மருமகன் கைது!