சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Read Time:1 Minute, 47 Second

love.childஅக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவரை தன்னுடன் அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞரை ஆஜர்படுத்தியபோது நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியும் குறித்த இளைஞரும் ஒருவரையொருவர் நேசித்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி அந்த இளைஞருடன் இளைஞரின் சகோதரி வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியாரை தாக்கி நிர்வாணப்படுத்தி வீதியில் துரத்திய மருமகன் கைது!
Next post இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி