நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு
Read Time:53 Second
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் ஊற்றியே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கலேவெலவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான நால்வரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியிருப்பதுடன் அவரை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating