விண்கற்களை முன்கூட்டியே எச்சரிக்கும் செய்மதி
Read Time:1 Minute, 26 Second
2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி விண்கல்லொன்று பூமியில் மோதக்கூடும் என கூறப்படும் நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லொன்று 2032 ஆம் ஆண்டில் பூமியை நெருங்கிவரும் என கூறப்படுகிறது.
பூமியின்மீது விண்கற்கள் மோதுவதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில், நிம்மதியளிக்கும் புதிய செய்தியொன்றையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
பூமியில் மோதக்கூடிய விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கும் செய்மதியொன்று அடுத்தமாதம் விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது என்ற செய்தியே அது.
17,000 கோடி ரூபா செலவில் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தினால் உருவாக்கப்பட்ட இச்செய்மதி இது. சந்திரனின் தரையிலுள்ள சிறு பொத்தானைக்கூட அவதானிக்கக்கூடியளவுக்கு இச்செய்மதி சக்திவாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating