கண்டுபிடிப்பு: 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சீனாவில் முறைகேடு, லஞ்ச, ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. புதிய அதிபர் ஜீ ஜின்பிங் பதவி ஏற்றதுமே கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணமாகும். இதன் எதிரொலியாக பலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் பெரிய துறையாக திகழும் ரெயில்வேயில் புதிய முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது ரெயில்வே கட்டுமான துறையினர் விருந்தினர்களுக்கு வரவேற்பு, விருந்து கொடுத்த வகையில் ரூ.810 கோடியை முறைகேடாக செலவிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச தடுப்பு கண்காணிப்பு துறை விசாரிக்கிறது. 8 அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஒருவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
ஆனால் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.இந்த ஊழல் விவகாரம் வெளியானதை அடுத்து ஊதாரி செலவு எதையும் செய்யக்கூடாது என்று ரெயில்வே அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Average Rating