விளக்கை சேவல் தட்டிவிட்டதால் மாணவி தீப்பற்றி மரணம்!!

Read Time:3 Minute, 4 Second

dead body16 வயது மாணவி இரவில் குப்­பி­லாம்பு வெளிச்­சத்தில் படித்துக் கொண்­டி­ருக்­கும்­போது சேவல் பறந்து வந்து குப்­பி­லாம்பைத் தட்­டி­விட்­டதால் உடையில் தீப்­பி­டித்து அந்த மாணவி உயிரி­ழந்­துள்ளார்.

பதுளை அல­கொல்ல வித்­தி­யா­ல­யத் தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாண­வியே
இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். ‘மகள் மீது தீப்­பி­டித்­ததும் தான் மயக்­க­ம­டைந்து கீழே விழுந்து விட்டேன் மயக்கம் தெளிந்­த­வுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்றேன். அங்கு என்ன நடந்­த­தென எனது மக­ளிடம் கேட்டேன்.

பாடம் படித்­துக்­கொண்­டி­ருக்கும் போது வீட்டில் வளர்க்கும் சேவல் பறந்­து­வந்து குப்­பி­லாம்பை தட்­டி­விட்­டது என்றாள்’ காலஞ்­சென்ற மாண­வியின் தாய் மரண விசா­ர­ணையில் சாட்­சி­ய­ளிக்கும் போது மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். ஊவா பர­ண­கம பொலிஸ் நிலைய சார்ஜன்ட் குண­பால சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்­தினார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ளிக்­கையில் கூறி­ய­தா­வது, எனது கணவர் 9 வரு­டங்­ளுக்கு முன்னர் இறந்­து­விட்டார். எனக்கு நான்கு பிள்­ளைகள். காலஞ்­சென்­றவர் எனது கடைசிப் பிள்ளை. எனது புதல்­வர்கள் மூவரும் கொழும்பில் கூலி வேலை செய்­கின்­றனர். அவர்கள் தங்­கையின் கல்விச் செல­வுக்கு பணம் அனுப்­புவர்.

சம்­பவ தினம் தான் வீட்­டுக்கு சிறிது தூரத்­தி­லுள்ள சமை­ய­ல­றையில் இரவு உணவு தயா­ரித்துக் கொண்­டி­ருந்தேன். மகள் வீட்டில் குப்­பி­லாம்பு வெளிச்­சத்தில் படித்துக் கொண்­டி­ருந்தார்.

திடீ­ரென மகளின் கூக்­குரல் சத்தம் கேட்­டதும் நான் ஓடி வந்து பார்த்த போது மகளின் உடம்­பி­லுள்ள உடைகள் எரிந்து கொண்­டி­ருந்­தது. அதைப் பார்த்து நான் மயக்­க­ம­டைந்து விட்டேன்.

அடுத்த வீட்டில் வசிக்கும் எனது கண­வரின் சகோ­தரர் மகளை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ளார் அங்­கி­ருந்து அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளார். மரணவிசாரணை அதிகாரி விபத்து மரணமெனத் தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து; 11 பேர் பலி!!
Next post கொள்ளுப்பிட்டி விபசார விடுதி முற்றுகை!!