கொள்ளுப்பிட்டி விபசார விடுதி முற்றுகை!!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த விபச்சார விடுதி நேற்றுமாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது அந்த நிலையத்தை நடத்திச் சென்ற பெண் ஒருவரும் அங்கிருந்த பெண்கள் எண்மரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் கந்தானை, மீகொட, வெள்ளவத்தை, ஜா-எல, தெஹியோவிட்ட மற்றும் தங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 24 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating