வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் மர்ம மரணம்!
Read Time:49 Second
மாத்தளை, நாவுல, தலாகொட பிரதேசத்தில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
58 வயதான இந்நபரது மனைவியும் பிள்ளைகளும் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத நிலையில் குறித்தநபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமாலை மீட்கப்பட்ட இந்த சடலத்தில் எந்தவித காயங்களும் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று மாத்தளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
Average Rating