ஆடைகளை கொள்ளையிட்ட பெண் கைது
Read Time:1 Minute, 9 Second
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி, மொரட்டுவையில் இயங்கி வரும் தைத்த ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தைத்த ஆடைகளை குறித்த பெண் கொள்ளையிட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் பெண் ஒருவர் கொள்ளையிடப்பட்ட ஆடைகளுடன் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating